மூன்று தேவிகள் ரீமேக்

மகள் : அப்பா கத ஒன்னு சொல்லுங்களேன்.
அப்பா : சரி , ஓபன் பண்ணினால் ஒரு காட்டுல வெறகு வெட்டி வாழ்கிற
உழைப்பாளி .
மகள் : ம். ம்.
அப்பா : வழமை போல் இருக்கிற ஒத்தக் கோடரிய எடுத்துகொண்டு காட்டுக்கு
வெறகு வெட்ட போனானாம்.
மகள் : சரி
அப்பா : குளம் ஒன்றுக்கு மேல இருக்கிற மரத்துல, கிளை ஒன்ன வெட்டும்போது
கோடரி தவறி குளத்துல விழுந்திச்சாம்.
மகள் : சரி .
அப்பா : ஒரே கோடரிய தொலைத்த கவலையினால் சாமிக்கிட்ட தன் நிலமைய வைத்து அழுது புலம்பிக்கொண்டு இருந்தானாம்.

மகள் : இம். பிறகு சாமி அந்தக் குளத்துல வந்து , தங்கம் , வெள்ளியாக , கோடரிய மாத்தி, மாத்தி கொண்டு வந்து கொடுத்ததும் , இந்தக் கோடரி என்னுடையதல்ல என்று கூற , நீ உண்மைய சொன்னாய், என்று சொல்லி தங்கம் , வெள்ளி மற்றும் கோடரி எல்லாம் சாமி குடுத்திட்டு மறஞ்சிசாம்.
இதுதானே கிளைமாக்ஸ் .. யப்பா ! மாத்தி சொல்லுப்பா போரடிக்குது .

அப்பா : ஓகே . அதே உழைப்பாளி , கொண்ஜெம் நல்ல நிலைமையோட
அதே குளத்துக்கு தன் மனைவியோட நீராட போனானாம் .
மகள் : ஆ ..
அப்பா : மனைவி குளத்துல தவறிடாளாம், திரும்பவும் யோசனையோடு இருக்க, சாமி வந்து , ஒரு தேவதைய கொண்டு வந்து காண்பிக்கவே , இதுதான் என் மனைவி என்று பொய் சொன்னானாம் . சாமியும் ஏன் பொய் உரைத்தாய் உனக்கு வசதி வந்தஉடன் , உன் நேர்மை எங்கு போனது என்று கேட்க .

இல்லை சாமியே ! முன்பு போல நீயும் தேவதைய ஒன்னக் கொண்டுவந்து காண்பிப்ப ! இரண்டாவது உலக அழகி போல் ஒன்னக் காண்பிப்ப, கடைசியாக என்னுடைய மனைவியுடன் எல்லாத்தையும் வெச்சிக்கோ என்று சொல்லுவ !
ஒன்னோட படுகின்ற பாடே போதும், இதுல இன்னும் இரண்டா ? என்று சொல்ல

சாமியும் குழம்பி போச்சாம் .

நம்ம ரீமேக் எப்படி !!!!!!!!

மகள் : சூபெர் பா !!!

எழுதியவர் : ரிப்னாஸ் - திக்குவல்லை (7-Aug-14, 1:20 pm)
பார்வை : 254

மேலே