தோல் கடிக்கா தோழன் - இராஜ்குமார்

என்
கனவுகளில் கால்பதித்து
உறக்கம் உடைத்து
உதடு உரசி
உயிர்க்க செய்த
என்னழகே

என்
நெற்றியில் நின்ற
இதமான காதலை
தொட்டு பார்க்க
முற்றிலும் முடியாது
என்ற என் அன்பே

நீ
ஏற்க மறுத்த தருணம்
ஏக்கத்தில் எட்டு வைத்து
எண்ணங்களை ஏனோ
ஏமாற்றி சிரிக்கிறது

என் கிறுக்கலின் கீதம்
அது காதலின் ராகம்

இதோ - நீ
ஏற்க மறுத்த என் காதலை
எறும்பிடம் சொல்லி - அதன்
காலில் வீழ்ந்து
கடிக்க சொன்னேன்

சில நொடி கடந்ததும்
என் உச்சி தொட்டது
ஓர் துளி கண்ணீர் .

எறும்பு சிந்திய
கண்ணீர் துளியின்
அர்த்தம் அறியேன் .

எறும்பும் - என்
காதல் உணர்ந்து
கடிக்க மறுத்து
ஆறுதல் சொல்லி
தோல் கடிக்கா
தோழனாய் அழுதது

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (7-Aug-14, 6:38 pm)
பார்வை : 132

மேலே