மூவுலகத்திலும் இடம் உண்டோ

குருதிப் பால் ஊட்டி
தாலாட்டி தூங்க வைக்க வேண்டிய
சிசுவை..
கள்ளிப் பால் ஊட்டி
ஒப்பாரி வைத்து
நிரந்தரமாய் தூங்க வைக்கும்
அரக்கியே..
பச்சை மண் துடி துடித்து
உயிர் துறக்கும் கொடூரத்தை
நினைக்கும் கனப்போழுதே
நெஞ்சுதிரம் கொட்டுதடி..
வளர்க்க உனக்கு வலிக்குது என்றால்
இறக்கும் உயிருக்கு எத்தனை வலி இருக்கும்??
இந்த பாவத்தை கழிப்பதற்கு இடமும் உண்டோ ???
பெற்றெடுத்த வலி போகும் முன்னே
இளம்பிஞ்சை பலியாக்கும்
நீயும் ஒரு தாயா??
நடக்கப்போவதை அறிந்திருந்தால்
கருவிலேயே தற்கொலை செய்திருக்குமடி
அந்த மானஸ்த குழந்தை!
எத்தனையோ தாய்தெய்வங்கள்
தங்களது சிசுக்காகவே உயிர்வாழும் இந்நாட்டில்
உன்போல் சில அரக்கிகள் மட்டுமே
சுயநலத்திற்காக சிசுவை அழிக்கின்றனர்..
இந்த பூவுலகில் சிசுவிற்கு பூ இட்ட
கொடூரக்காரி உனக்கு
மூவுலத்திலும் இடம் உண்டோ???

எழுதியவர் : த.சுகந்தி (11-Aug-14, 1:25 pm)
சேர்த்தது : சுகந்தி. த
பார்வை : 72

மேலே