விழிமுத்தம் - சந்தோஷ்

குளிர்தேசத்தின்
வெப்ப சலனத்தில்
உஷ்ணமடைகிறேன் தோழி.

மார்கழி வெயிலில்
மழை என்னை சுடுகிறது
சித்திரை குளிரில்
வெயில் என்னை நனைக்கிறது
என் உணர்ச்சிதேசத்தின்
பருவநிலை மாற்றமோ?
உனது கன்னிபருவத்தால்
உருவான என் பித்தநிலையோ?

ஏதுமறியா மாணவனாய்
பிழையறியா பித்தனாய்
பொய்யறியா மழலையாய்
வெகுளி சிரிப்பில்
தகுதியுடைய காதலனாய்
காத்திருக்கிறேன் தோழி..!

சம்மதமென்று கூட
சொல்லவேண்டாம் பெண்ணே..!
உன் விழியால்
என் இதழை முத்தமிடு
போதும் ..
இந்த விழிமுத்தத்தில்
என் காதல் சித்தம்
தெளிந்துவிடும் தானே..!?


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (13-Aug-14, 11:58 am)
பார்வை : 1076

மேலே