கேள்விகள்
எடுப்பதும் ,தொடுப்பதும்,
வினையென்றால்,
நினைப்பதை என்னவென்பது?
பார்ப்பதும், நடப்பதும்,
செயலென்றால்,
மகிழ்வதை என்னவென்பது ?
படைப்பதும் ,காப்பதும்,
மரபென்றால்,
மரணத்தை என்னவென்பது ?
கொடுப்பதும் ,பெறுவதும்,
தர்மமென்றால்,
நேயத்தை என்னவென்பது ?
தொழுவதும், எழுவதும்,
பக்தி யென்றால்,
பணிவை என்னவென்பது ?
பொறுமையும் ,நயமான பேச்சும்,
அன்பென்றால்,
அரவணைப்பை என்னவென்பது ?