எப்படி புரிய வைப்பேன்

உன்னைக் கண்ட நாள் முதல்
இன்று வரை ஒரு வார்த்தையேனும்
உன்னுடன் பேசியதில்லை
நீ என் மனம் துண்டு துண்டாய்
உடையும் வரை பேசியிருக்கிறாய்
இன்றும் பேசுகிறாய்
நான் தடுக்கவில்லை - உன்
வார்த்தைகள் வழியை தருவதாயினும்
என் உடைந்த மனதிற்கு சுகமானதே
நீ என்னைக் கண்ட நாள்
முதல் கேட்கிறாய் - " ஒரு
வார்த்தைப் பேசு . உன்
பெயராவது சொல்லு "
நான் என் கண்களால் பதில்
சொல்லும் பொழுது - நீ
என் கைப் பற்றி ஏதேதோ
சொல்லி அழுகிறாய்
உனக்கு எப்படி புரிய வைப்பேன்
நான் ஊமை என்று .............

எழுதியவர் : fasrina (25-Aug-14, 9:33 am)
பார்வை : 104

மேலே