இனிய இல்லறம்
மனங்கள் இரண்டு இணையும் போது ...
திருமணம் அரங்கேறும் ....
குணங்கள் ஒன்றாய் கூடும் போது
குடும்பம் உறுதி படும் ...
சொந்த உறவுகள் மனம் மகிழ
ஒன்று கூடி வாழ்ந்தாலே
இறைவன் நமக்கு தந்த
ஆசிர்வாதம் தேடி வரும்... !
இரவும் பகலும் இணைந்தாலே
ஒரு நாளாய் முழுமை பெறும் ...
இன்பம் துன்பம் கலந்தாலே
அதில் வாழ்க்கை நிறைவு பெறும்
அன்பு எனும் வழியில் சென்றால்
ஆசை எல்லாம் தேடி வரும் ....
இதுவே என்றும் இறைவன் விரும்பும்
இனிய இல்லறம் ...
என்றும் அன்புடன்
வாழ வாழ்த்துகின்றேன் .......
வாழ்க வளமுடன்....