கொக்கு

வத்திய குளத்து
கொக்கு வேறு குளம்
பாத்துக்கொள்ளும்

வத்திய குளம்
இக்கொக்கை குலத்தோடு சேர்த்துக் கொல்லும்

காணாம போன தண்ணி
கண்ணுக்குள் ஊத்தெடுத்து
காணலா போனதெண்ணி
வானத்த பார்க்குதுங்க

நாத்து நட நாதி இல்ல
செத்த கிணறு மீதமுங்க
பட்டினி சாவ தடுத்திடவே
பலகொக்கு பட்டணத்தை நாடுதுங்க

வேறு தொழில் செஞ்சி இந்நா
வயித்த நிரப்பி போகலாம்
இப்படியே போனாக்கா ஒருநா
பணத்தை தின்னு சாகலாம்

வான் பாத்து காத்திருக்கன்
மாரி அம்மா தருவாளா
மது விக்கும் அரசம்மா
இத பாக்க வருவாளா........?

எழுதியவர் : கவியரசன் (29-Aug-14, 9:50 pm)
பார்வை : 382

மேலே