வந்து விட்டாள் ஒருத்தி

வானத்து நிலவே ! உன் அழகை
ஜெயிக்க வந்து விட்டாள் ஒருத்தி
தோட்டத்து மலரே ! உன் வாசனையை
ஜெயிக்க வந்து விட்டாள் ஒருத்தி
பூஞ்சோலை காற்றே ! உன் சுகத்தை
ஜெயிக்க வந்து விட்டாள் ஒருத்தி
இளவம் பஞ்சே ! உன் மென்மையை
ஜெயிக்க வந்து விட்டாள் ஒருத்தி
ஓடும் நதியே ! உன் குளிர்மையை
ஜெயிக்க வந்து விட்டாள் ஒருத்தி

நிலவை ரசிக்க பிடிக்கவில்லை
அவள் முகம் கண்ட நாள் முதல்
மலரின் வாசனை மயக்கவில்லை
அவள் கூந்தல் வாசனை உணர்ந்த முதல்
காற்றின் தடவல் சுகம் அளிக்கவில்லை
அவள் கை என் கை பிடித்தது முதல்
பஞ்சின் மென்மை உணரவில்லை
அவள் மனதின் மென்மை கண்ட முதல்
நதியின் குளிர்மை உருத்தவில்லை
அவள் கண்களின் குளிர்மை காண முதல்

இயற்கையே ! என்னை மன்னித்து விடு
உன் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி
எனக்கென ஒருத்தி கிடைத்து விட்டாள்
இன்று என் காதலியாய் ......
நாளை என் மனைவியாய்......

எழுதியவர் : fasrina (9-Sep-14, 9:20 am)
பார்வை : 104

மேலே