என் பாட்டியின் அன்பு
சொர்க்கத்தில் இருக்கும் ரோஜா மலர்களில்
ஒன்றை நீ எனக்கு அனுப்பி வைப்பாயா?
நான் அதை என் இதயத்தின் அருகே வைப்பேன்!
நீ எப்பொழுதும் அங்கு இருப்பாய்!
ஒவ்வொரு இரவிலும் அதை என்
தலையணையின் மேல் வைப்பேன்!
தேவதைகள் என்னிடம் நெருங்கி வரும்போது
உன்னிருப்பை மீண்டும் உணர்வேன்!
ஆண்டாண்டுகளாய் எனக்கு நீ
உதவுவதற்கு நான் நன்றி சொல்வேன்;
எப்பொழுதும் என் மதிப்புறு பாட்டியை மறவேன்!
என் பாட்டியின் அன்பு என்றும் உறுதியானது!