சூரியனைப் பார்த்தாயா - இராஜ்குமார்
சூரியனைப் பார்த்தாயா ..?
==========================
காலையில் சூரியன் முகம் சிவக்க - காரணம்
இரவு முழுக்க நிலவுக்கு சவாலாய் நீ
பகலில் முழுக்க வெயில் சுட்டெரிக்க - காரணம்
உன்முகத்தை கருப்பாக்க சூரியனின் சூழ்ச்சி
சூரியன் உள்பட யார் நினைத்தாலும் உன்னழகு
முகத்தை அலங்கோலம் செய்ய முடியாது
உன் முகத்தின் அழகை என்றும்
என் மனதில் தைத்து காக்கிறேன்
எப்படி சுட்டாலும் என்தோலே உருகி கருகும்
அப்படியே என்மனதோடு உன்முகமே மெருகேறும் !
- இராஜ்குமார்
நாள் : 21 - 5 - 2011