வீண்மீனே விளையாட வா - இராஜ்குமார்

வீண்மீனே விளையாட வா ?
===========================

ஏய் விண்மீன் களே ?

எனது இருவிழியும்
உனது எண்ணிக்கையை
எண்ண துணிந்து
முடியாமல் போன முடிவால்

கவலைக் கொண்ட
என் கண்ணை பார்த்து
சிரித்து சிரித்து
கர்வம் கொள்ளாதே ?

உனக்கொரு சவால்..
சண்டையிடாமல் செவி
சாய்த்து கேட்டுக்கொள்

ஒற்றை இரவில்
உன்னை மட்டும்
எத்துனை விழிகள்
விழித்துக் கொண்டே
சலிக்காமல் எண்ணுதென
எண்ணிச் சொல் என்னிடம் ..!

கணக்கிட முடியாமல்
களைத்துப் போனால்
அழுது அழுது - உன்
கண்ணீர் துளிகளை
கணக்கிடாமல் கொட்டு

நீ அழுமந்த இரவிலாவது
எங்கள் வாசல் மழை
துளிகளில் குளிக்கட்டும் ..!!

- இராஜ்குமார்

நாள் :25 - 5 -2014

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Sep-14, 10:09 am)
பார்வை : 76

மேலே