நீ என்ன செய்தாய் - இராஜ்குமார்

நீ என்ன செய்தாய்
=================

பெண்ணே நீ எழுதிய
என் பெயரில்
முன்னே போனது
ஓர் உயிர்

நீயதை அடித்து முடித்த
மறு கணம்
அழுது போகுது
என் மனம்

********************************************************
கள்ளி பாலின் தனிகுணமே
பலஉயிரை கிள்ளி எடுக்கும்
கள்ளி உந்தன் அழகுமுகமோ
என்மனதை வெட்டி இழுக்கும்

***********************************************************

உனை வரையப் போகும் பென்சிலை
எத்தனை முறை சீவினாலும்
உன்பார்வை போல்
கூர்மையில்லை

-இராஜ்குமார்

நாள் : 31 5 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Sep-14, 7:11 am)
பார்வை : 101

மேலே