பக்குவம் சொன்னவள் நீயடி - இராஜ்குமார்
பக்குவம் சொன்னவள் நீயடி
============================
அன்பு தெளிக்கும் பன்னீரில்
வாசனை வீசியவள் நீயடி
பூமுகம் சிந்தும் தண்ணீரில்
புன்னகை தந்தவள் நீயடி
கவலை கரையும் கண்ணீரில்
பக்குவம் சொன்னவள் நீயடி
கவிதை வாழும் நன்னீரில்
நனைய வைத்தவள் நீயடி
மழலை பேசும் தேன்மொழியில்
அழுகை உடைத்தவள் நீயடி
காதல் வழியும் கனிமொழியில்
இதயம் கிழித்தவள் நீயடி
- இராஜ்குமார்
நாள் :2 - 6 - 2011