இன்னும் என்ன வேண்டும்

தேடி வந்த உன்னை
நானும் நாடி வந்தேன் !!
உறவு நானென்று
அறிமுகம் செய்து வைத்தாய் !!
உறங்கப்போகும் முன்
உள்ளத்தை களவாடி சென்றாய் !!
விடியும் முன்
விழி வாசல் வந்து நின்றாய் !!
சொல்வதற்குள்
அர்த்தம் புரிகிறது என்றாய் !!
கேட்காமலே
உறவுகள் தந்தாய் !!
சொல்லாமலே
காரணம் நீயடி சொன்னாய் !!
பேசாமலே
விலகியும் நின்றாய் !!
தெரியாமலே
உறவையும் பிரித்தாய் !!
என் எண்ணங்களை பாழ்படுத்திவிட்டு
இன்னும் உ ன் எதிர்பார்ப்பில்
எதை மிச்சம் வைத்திருக்கிறாய்
நினைவுகளின் கதவுகளில் வழிமறித்துக்கொண்டு...............

எழுதியவர் : சுமித்ரா (14-Sep-14, 10:58 pm)
பார்வை : 402

மேலே