நினைவுகளில் கரையும் காலங்கள்

கனவாகிப் போன நிஜங்களில்
மறையும்-
நிகழ்காலத்தின் நிழல்கள்!

வடுவாகிப் போன சொற்களில்
தடுமாறும்-
வருகின்ற வார்த்தைகள்!

செய்வது யாதென அறியாது-
பேதலிக்கும் மனம்!

மனசுக்குள்ளிருந்து
மௌனமாய்த் தடுமாறி
திணறித் துடித்து-

கண்களில் கரையும்
கனவுகள்!

-கணந்தோறும்
நினைவுகளில் கரையும்
காலங்கள்!

16.08.2002

எழுதியவர் : மனோ & மனோ (15-Sep-14, 11:23 am)
பார்வை : 105

மேலே