பித்துப்பிடிக்க வைத்து விடாதே

உன்
கண்ணழகை கண்டால்
கண்ணனுக்கும் ஆசைவரும்
களவாடிடுவான் அவன்
கண்ணருகில் சென்று விடாதே.!

உன்
சிரிப்பழகை கண்டால்
சில்வண்டும் சீறி வரும்
உன்னிதழில் தேன் சுவைக்க
சில்வண்டினை திட்டி விடாதே..!

உன்
செந்நிறமேனி கண்டால்
மழைத்துளிகளும் முத்தமிட
முந்திகொண்டு வரும் யுனதருகில்
துளிகளுக்கிடையே போரினை மூட்டி விடாதே..!

உன்
குரலழகை கேட்டால்
கருங்குயிலும் பறந்து வரும்
குரலிசையை பயின்று செல்ல
குரலுயர்த்தி பேசி விடாதே..!

உன்
கூந்தலழகை கண்டால்
கிழக்கு உதிக்கும் சூரியனும்
கிழே சென்றுவிடும் காரிருள் வந்ததென
சூரியனுக்கும் பித்துப்பிடிக்க வைத்து விடாதே..!

எழுதியவர் : ச.ஷர்மா (16-Sep-14, 7:38 pm)
பார்வை : 645

மேலே