இமையின் இரவில் இவள் - இராஜ்குமார்
இமையின் இரவில் இவள்
=========================
நீ நிலவுக்கு மேலே
ஓடி ஓடி ஒளிகிறாய்
நீ லட்சம் விண்மீனை
தீண்டி தீண்டி பிடிக்கிறாய்
நீ விண்வெளி பூக்களை
பறித்து பறித்து ரசிக்கிறாய்
நீ வானில்வரும் வண்டினை
கிள்ளி கிள்ளி சிரிக்கிறாய்
நீ கிரகம் அனைத்தையும்
தாண்டி தாண்டி ஓடுகிறாய்
நீ பால்வெளி குளத்தில்
குதித்து குதித்து குளிக்கிறாய்
நீ மேகத்தை முழுதாய்
மிதித்து மிதித்து துரத்தினாய்
நீ வானத்தை அழகாய்
வளைத்து வளைத்து சுருக்கினாய்
ஆனால் பெண்ணே....
அன்று அமாவாசை இரவு ..
இப்போது புரிகிறதா அன்பே ...
நீ கனவில் காதலாய்
மிதந்து மிதந்து வருகிறாய்
நீ நிஜமாய் உயிரினில்
கலந்தது கலந்து விடுகிறாய்
- இராஜ்குமார்
நாள் : 23 - 6 - 2011