விளிம்பின்நுனியில் நீ பயந்தால் - இராஜ்குமார்
விளிம்பின்நுனியில் நீ பயந்தால்
=============================
தெருமுனையில் நீ கடக்க
விழிகள் கிறங்கி கிடக்கிறது
ரசனை முழுக்க நீ கொடுக்க
இமைகள் உறங்கி அசைகிறது
இதழை சுழித்து நீ சிரித்தால்
தேகம் திணறி சிலிர்கிறது
சிவப்பு தாவணி நீ அணிந்தால்
நகமும் சிவப்பாய் மாறுது
கத்திமுனையில் நீ நின்றால்
நெத்திபொட்டில் நான் வருவேன்
விளிம்பின்நுனியில் நீ பயந்தால்
உந்தன்உருவம் நான் காப்பேன்
- இராஜ்குமார்
நாள் : 9 - 7 - 2011