நம்பிக்கை நினைவை வரைகிறேன் - இராஜ்குமார்

நம்பிக்கை நினைவை வரைகிறேன்
==================================

சூரிய உதயம் உதிர்த்த
செங்கதிரின் நுனியில்
உன்முகத்தை உருக்கி
என்விழியில் விதைக்கிறேன்

கோபம் சென்ற கோணத்தின்
சரிந்த தேகத்தை
சாயாமல் உயர்த்தி
சைகை இதழாய் சிரிக்கிறேன்

சுருங்கிப்போன பாதம்
பயத்தோடு பதித்த
சுருக்கமில்லா சுவடில்
நம்பிக்கை நினைவை வரைகிறேன்

- இராஜ்குமார்

நாள் : 21 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் (23-Sep-14, 11:07 pm)
பார்வை : 101

மேலே