நம்பிக்கை நினைவை வரைகிறேன் - இராஜ்குமார்
நம்பிக்கை நினைவை வரைகிறேன்
==================================
சூரிய உதயம் உதிர்த்த
செங்கதிரின் நுனியில்
உன்முகத்தை உருக்கி
என்விழியில் விதைக்கிறேன்
கோபம் சென்ற கோணத்தின்
சரிந்த தேகத்தை
சாயாமல் உயர்த்தி
சைகை இதழாய் சிரிக்கிறேன்
சுருங்கிப்போன பாதம்
பயத்தோடு பதித்த
சுருக்கமில்லா சுவடில்
நம்பிக்கை நினைவை வரைகிறேன்
- இராஜ்குமார்
நாள் : 21 - 8 - 2011