பேரன் குறள்கள்- 17
பேரன் குறள்கள்- 17
பேரா! இவைகேட்டுப் பின்னர்,யோ சிக்க,நற்
பேறாம் உணர்ந்து படி!---------------------------------------------------------------------01
அறங்கூறல் ஆற்றாத போதும்,வேண் டாமே
புறங்கூறிப் பேசும் பொழுது.------------------------------------------------------------02
நல்லதமிழ்ச் சொல்லால் நயம்படப் பேசிட,நீ
கல்விதனில் கற்பாய் குறள்!-----------------------------------------------------------03
வெல்லுஞ்சொல் மட்டுமோ வாழ்க்கை இனியன
சொல்லுஞ்சொல் கூட்டல் எது?------------------------------------------------------04
அச்சம் உடன்வாழ்வோர் மேல்வருமேல் நல்லொழுக்கம்
மிச்சமோ மேன்மக்கள் உள்?-----------------------------------------------------------05
தோன்றிற் புகழொடு தோன்றுக ஊழலைச்
சான்றாக இல்லாமல் வைத்து.-------------------------------------------------------06
ஊன்றுகோல் கட்சியின் உள்ளமைப்போ ஊழலுக்குச்
சான்று,ஏனோ கிட்டவில்லை இங்கு?----------------------------------------------07
சுவரொட்டி ஒட்டிச் சுவைபடப் பேசித்
தவறு,ஒட்டிச் செல்வார் தவிர்.--------------------------------------------------------08
கொன்றுயிர் உண்ணலும் நன்றேல், விலங்கினும்
இன்று,எவண் மக்கள் உயர்வு?----------------------------------------------------------09
பாரதிரப் பேசு;சாதி பாராது வாழ்;மதப்
போரழிய பாடுபடல் போற்று.----------------------------------------------------------10