தாளில் தவறாமல் எழுத - இராஜ்குமார்
தாளில் தவறாமல் எழுத .
========================
உருவம் உள்வாங்கும்
இரகசிய ஓர்வழி
உன்னிரு கருவிழி
தேனை கொட்டும் பூவும்
நீரை பொழியும் வானும்
காதல் கவியில் நானும்
உன்னில் மூழ்கிப் போவது ஏனோ ?
மண்ணாய் நீ போனாலும்
விண்ணை விட்டு வெளியேறி
மழைத்துளியாய் நான் விழுவேன்
மண்வாசம் வீசி நீ மகிழ ..!
பெண்ணே ....
உன்னழகு பேரை
தாளில் தவறாமல் எழுத ..
விரலும் வெக்கப்படுதடி ..!!
- இராஜ்குமார்
நாள் : 30 - 8 - 2011