தாளில் தவறாமல் எழுத - இராஜ்குமார்

தாளில் தவறாமல் எழுத .
========================
உருவம் உள்வாங்கும்
இரகசிய ஓர்வழி
உன்னிரு கருவிழி

தேனை கொட்டும் பூவும்
நீரை பொழியும் வானும்
காதல் கவியில் நானும்
உன்னில் மூழ்கிப் போவது ஏனோ ?

மண்ணாய் நீ போனாலும்
விண்ணை விட்டு வெளியேறி
மழைத்துளியாய் நான் விழுவேன்
மண்வாசம் வீசி நீ மகிழ ..!

பெண்ணே ....

உன்னழகு பேரை
தாளில் தவறாமல் எழுத ..
விரலும் வெக்கப்படுதடி ..!!

- இராஜ்குமார்

நாள் : 30 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Sep-14, 10:56 am)
பார்வை : 176

மேலே