எப்பொழுது

​விழிகொண்டு தீண்டிய உன்னை
என் விரல் கொண்டு தீண்டுவது
எப்பொழுது...! ​

கனவுகளில் வாழ்க்கை நடத்துகின்றேன்
என் கனவுகள் நினைவாவது
எப்பொழுது..!

தூரம் என்ற சொல்லை வெறுக்கின்றேன்
தூரிகை உந்தன் அருகில் நிற்பது
எப்பொழுது..!

பெருமூச்சு விட்டே தேய்கிறேன்
உந்தன் பெண்மையை பார்த்து தேறுவது
எப்பொழுது..!

நாட்காட்டியை பார்த்தே காலத்தை கழிக்கின்றேன்
நல்ல நாழிகை பார்த்து நாம் சேர்வது
எப்பொழுது..!

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (25-Sep-14, 5:25 pm)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
Tanglish : eppoluthu
பார்வை : 55

மேலே