பொய்யின்றி கவிதை முதன் முதலாய்

என்னை விலகி செல்லாதே
மறக்க சொல்லாதே
மௌனம் கொள்ளாதே
மௌனத்தால் கொல்லாதே

கவிதை ரசித்திட தினம் பிடிக்கும்
என் கவிதையே
உன் நிழலாய் வர பிடிக்கும்
உண்மையாய் உனக்கே தெரியாமல்
உன்னை ரசித்திட மனம் விரும்பும்

ஆயிரம் பொய்கள் நான் சொல்வேன்
அத்தனை பொய்யும் கவிதை என்பேன்
பொய்யின்றி கவிதை முதன் முதலாய்
உன்னை கண்டேன் விழி அருகாய்

உன் பார்வை படுமா தவம் கிடந்தேன்
நீ போகும்வழியில் காத்திருந்தேன்
இரக்கம் கொள்ளுமா உன் மனசு
காதல் என்பது எனக்கு புதுசு

எழுதியவர் : ருத்ரன் (26-Sep-14, 6:36 pm)
பார்வை : 142

மேலே