நீயே

===============================
பங்குனி வெய்யிலில்- வந்த
சிறு தூரல் நீ
==============================

பனித்துளிகளில்- எனை
படர வைத்த தென்றல் நீ
==============================

மேனியை சிலிர்க்க வைத்த -சிறு
பூங்கொத்து நீ
=============================

வாடை காற்று பட்டு -வருந்திய
வாலிபன் நீ
=============================

திருமுகம் பார்த்து -வளர்ந்த
திருமகன் நீ
============================

வளர்பிறையில் தெரியும்
முழு நிலவு நீ
============================

மண் மணம் மாறாத
மன்னவன் நீ
===========================

மார்கழியில் பூத்த
பனி மலர் நீ
==========================

மங்கள்யானையும் வீழப்பண்ணும் -ஒரு
கடைவிழிப் பார்வை நீ
===========================

கண்ணை பறித்து -என்னை
புதுப்பித்தவனும் நீ
=========================

மர்மவித்தை காட்டும்
மாயக்காரன் நீ
========================

வார்த்தைகள் கோர்த்து
வாசிக்கும் வாசகன் நீ

========================

புரியாத புதிரை
புரிய வைக்கும் புலவனும் நீ
========================

தேடல் தந்து கூடல்
கொள்ளும் மாயவன் நீ
========================

வாழ்க்கையை தந்த
வள்ளலும் நீ
=======================

கனவுகள் தந்த
கண்களும் நீ
=======================

அவ் கண்கள் தந்த
காதலும் நீ
=======================
=======================
=======================

எழுதியவர் : நல்லவர் (27-Sep-14, 10:30 pm)
Tanglish : neeye
பார்வை : 82

மேலே