நீயே
===============================
பங்குனி வெய்யிலில்- வந்த
சிறு தூரல் நீ
==============================
பனித்துளிகளில்- எனை
படர வைத்த தென்றல் நீ
==============================
மேனியை சிலிர்க்க வைத்த -சிறு
பூங்கொத்து நீ
=============================
வாடை காற்று பட்டு -வருந்திய
வாலிபன் நீ
=============================
திருமுகம் பார்த்து -வளர்ந்த
திருமகன் நீ
============================
வளர்பிறையில் தெரியும்
முழு நிலவு நீ
============================
மண் மணம் மாறாத
மன்னவன் நீ
===========================
மார்கழியில் பூத்த
பனி மலர் நீ
==========================
மங்கள்யானையும் வீழப்பண்ணும் -ஒரு
கடைவிழிப் பார்வை நீ
===========================
கண்ணை பறித்து -என்னை
புதுப்பித்தவனும் நீ
=========================
மர்மவித்தை காட்டும்
மாயக்காரன் நீ
========================
வார்த்தைகள் கோர்த்து
வாசிக்கும் வாசகன் நீ
========================
புரியாத புதிரை
புரிய வைக்கும் புலவனும் நீ
========================
தேடல் தந்து கூடல்
கொள்ளும் மாயவன் நீ
========================
வாழ்க்கையை தந்த
வள்ளலும் நீ
=======================
கனவுகள் தந்த
கண்களும் நீ
=======================
அவ் கண்கள் தந்த
காதலும் நீ
=======================
=======================
=======================