Gopal Singh அண்ட் relaxing

அமேரிக்காவில் பணிபுரியும் கோபால்சிங் ஒருநாள் பீச்சில் ஹாயாக படுத்து பலவற்றையும் யோசித்துகொண்டிருந்தார்.

அங்கு வந்த அமெரிக்கர் ஆர் யூ ரிலாக்சிங்...? என்று கேட்டார். நம்மாளோ ..., நோ .., "அயாம் கோபால்சிங்" என்றார். அடுத்து வந்த இன்னொருவரும் அதையே கேட்க நம்மவரும் அதையே சொல்ல ,அடுத்தடுத்து வந்தவர்களுக்கு பதில்சொல்ல எரிச்சல்பட்டு வேறிடம் சென்றார்.

அங்கே ஒருவர் இவரைப்போல ஹாயாக படுத்து தம்மடித்துக்கொண்டிருந்தார். நம்மாளு அவரிடம் போய் ஆர் யூ ரிலாக்சிங்...? என்று வினவினார். புன்னகையுடன் திரும்பிய அவரோ எஸ்...என்றார்.

அடுத்த நிமிடம் கோபால்சிங் கோபம் கொண்ட சிங்காய் மாறி தனக்குத் தெரிந்த குங்க்பூ கராத்தே எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தாக்கத் தொடங்கினார் ...,ஏண்டா நீ இங்க ஹாயா கெடக்குற..., வர்றவன் போறவனெல்லாம் என்னைய ரிலாக்சிங்கா, ரிலாக்சிங்கா 'னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டானுன்களே... என்று போட்டாரே ஒரு போடு.

எழுதியவர் : (28-Sep-14, 3:55 am)
பார்வை : 199

மேலே