சிரித்துச் செல் - இராஜ்குமார்
சிரித்துச் செல்
===============
எனை வெறுத்த என்னழகே
என்னாசை கேள்
என்கவிதைத் தொகுப்பை
வாங்கிச் செல்
காதலில் ஊறிய ரசனையை
தாங்கிக் கொள்
எழுத்தாய் மாறிய உணர்வை
புரிந்துக் கொள்
உன்மனதின் எண்ணம் கொஞ்சம்
விளக்கிச் சொல்
இல்லையெனில்..
கவி தொகுப்பை என்வாசலில்
நீயே எரித்துச் செல்
மீண்டும் ஒருநாள் என்வாசல்
வந்துச் செல்
எரித்த சாம்பல் என்னிடமே
வாங்கிச் கொள்
அச்சாம்பலில் ..
வரைந்து வைத்தது உன்னுருவம்
பார்த்துக் கொள்
மீண்டும் வெறுத்தால் ..
ஒருமுறை என்னை பார்த்து
சிரித்துச் செல்
- இராஜ்குமார்
நாள் ; 31 - 8 - 2011