தாய்மையடையா தாயின் வலி
இறைவா !
உயிர் பிறக்கும் போது பெறும்,
உயிர் பிரியும் வலியை,
நான் பெறக்கூடாதென
நினைத்தாயோ !
உயிர் பிரியும் வலியை விட,
ஊர் பேசும் வார்த்தையின்
வலியை நீ அறிவாயோ !
உயிர் பிரியும் வலி ஒரு நிமிடமே,
வசைபாடும் வார்த்தைகளின்
வலி நொடிகள்தோறும் தொடர்கிறது..
உயிர் பிறக்கும் வலியை கொடு
அல்லது என் உயிரை பறித்துவிடு
இறைவா !