தாய்மையடையா தாயின் வலி

இறைவா !

உயிர் பிறக்கும் போது பெறும்,
உயிர் பிரியும் வலியை,
நான் பெறக்கூடாதென
நினைத்தாயோ !

உயிர் பிரியும் வலியை விட,
ஊர் பேசும் வார்த்தையின்
வலியை நீ அறிவாயோ !

உயிர் பிரியும் வலி ஒரு நிமிடமே,
வசைபாடும் வார்த்தைகளின்
வலி நொடிகள்தோறும் தொடர்கிறது..

உயிர் பிறக்கும் வலியை கொடு
அல்லது என் உயிரை பறித்துவிடு

இறைவா !

எழுதியவர் : s . s (2-Oct-14, 12:08 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 81

மேலே