எதையோ நினைத்து எழுதினேன் எதுவாகவோ உருவானது
எதையோ நினைத்து எழுதினேன்..
எதுவாகவோ உருவானது..
ஆகாயத்தின் அகந்தை..
நிலாவின் சிரிப்பு..
விண்மீனின் கண்சிம்மிட்டல்..
சுட்டும் வெயிலின் தீண்டல் பார்வை..
கடலின் ஆழம்..
இவை யாவும் நினைத்துதான் கிறுக்கினேன்..!
கள்வன் நீ..!
எதை பற்றியும் யோசிக்க விடாமல், இதையத்திநின்று நினைவில் தோன்றி..
நிஜத்தில் நிழலாடுகிறாய்..!
இமை மூடினால் மறைந்திடுவாயோ என்றஞ்சி,
நெருங்கி சிகை தீண்டிநாளோ காற்றாகிறாய்..!
மறக்கத்தான் நினைக்கிறன்..!
என்ன செய்ய..?
பூட்டி கிடந்த இதயத்தினுள் அழைப்பில்லாமல் நுழைந்துவிட்டாய்..!!!
அடைமழையின் ஒரு துளியும் நீயென பார்க்கிறேன்,
அந்திவானம் சிரித்தது..!
ஜில்லென்ற காற்று சின்னதாய் உரச நீயென திரும்பி பார்க்கிறேன்..!
வினாவும் இல்லை..
விடையும் இல்லை..
அன்று நாம் யாரோ..?
இன்று நீ யாரோ.. நான் யாரோ..!!??
விடை வேண்டாம்..!
வினா கொடு...!!