நன்றிகள்

ஒன்றும் தெரியாத என்னை
---ஓரளவு உயர்த்தி விட்டு
சின்னப் பாயலாம் என்னை
---சீராட்டி தாயை போலே
நன்றாய் வளர்த்த நமது
---நல்ல எழுத்து தளத்திற்கு
நன்றிகள் சொல்ல நானும்
---நவில்கிறேன் இந்தக் கவிதை !

தோன்றிய விடயம் எல்லாம்
---தொல்கவிதை என்றே ! கவிதை
தோன்றிய காலத்தில் நான்
---நினைத்திருந்தேன் ஆனால் இன்று
ஆன்ற புலமை கொண்ட
---அரும்பென என்னை முகிழ்த்த
சான்றோரை வணங்கித் தொழுது
---சாற்றுகிறேன் நன்றி மாலை !

கருத்துகள் யாவும் இனிதாய்
---கரும்பென எனக்குத் தந்து
திருத்தியே என்னை நேரிய
---நல்வழியில் கொண்டு சென்ற
அருந்தவ நண்பர் களுக்கும்
---ஆசை அக்காகளுக்கும் என்றும்
மருந்தென எனக்குத் திகழும்
---அண்ணன்க ளுக்கும்நன்றி சொல்வேன் !

என்கவிகள் தன்னில் எல்லாம்
---எப்போதும் நிறையே கண்டு
என்விழியில் முள்ளி ருந்தால்
---எடுத்தெறிந்து நல்வழி யாக்கி
தன்வழியை எனக்குச் சொல்லும்
---ஏற்றமுடைய அய்யா களுக்கும்
இன்னும்பல நன்மை தந்திடும்
---இத்தளத்தோர் யாவருக்கும் நன்றி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Oct-14, 12:56 pm)
Tanglish : nanRikaL
பார்வை : 664

மேலே