அன்னைக்கு வாழ்த்து
அன்னை உன் அன்புக்கு
அகிலமும் ஈடில்லை
நீ செய்த தொண்டுக்கு
வேறேதும் இணையில்லை
ஏசலுக்கும் பூசலுக்கும் இடையில்
எதிர்காலத்தை வழிவகுத்தாய் ...
எண்ணத்தில் எங்களை வைத்து
ஏற்றத்தில் எற்றிவைத்தாய்
வாழ்கை என்னும் விளக்கில்
சுடரொளியாய் நாங்கள் மிளிர
எண்ணையாய் உருகி
திரியாய் தேய்ந்து தோய்ந்தாய் ..
பிதாவின் பிரியமும்
மாதாவின் மந்தகாசமும்
நிறைந்திருக்கும் உன்னின்
கருணையை என்னென்று சொல்வேன் ...?
அன்னையே ...
வானவேடிக்கையாய் வாழ்வு
விழாக்கோலம் பூண்டது
உன்னின் பிறந்தநாளில் ...
எங்கணம் வாழ்த்துவது என்று
இக்கணம் யூகித்து
எக்கணமும் எண்ணி அழியா
எழுத்துக்களை தருவித்து
என் வாழ்த்தினையும் ஏடுரைத்தேன் ...
வையத்தின் வாழ்வெதுவோ
அஃதே அன்னையின் வாழ்வும்
தழைத்து ஓங்கட்டும் ...
வாழிய வாழிய ...
என் அன்னையே ...
மணமிகு மலரே .....