நிந்தனை
எப்படியோ கடைசியில்,
உனக்கு பிடிக்காத பிறவியாகிவிட்டேன் !
இனி எப்படியாவது,
மீதப்பட்ட வாழ்க்கையை,
கத்திமேல் நடப்பதுபோல் கவனமாய்,
வாழ்ந்து முடித்துவிடுகிறேன் !
என்றாலும்,
நம்பிக்கையில்லாத செயல்கள்,
என் பாத்திரத்தில் நிறைவதால்,
எனவே,
இறைவா !!
இருக்கட்டும் கண்டிப்பாய்,
இது என் கடைசி ஜென்மமாய் !!