நிந்தனை

எப்படியோ கடைசியில்,
உனக்கு பிடிக்காத பிறவியாகிவிட்டேன் !
இனி எப்படியாவது,
மீதப்பட்ட வாழ்க்கையை,
கத்திமேல் நடப்பதுபோல் கவனமாய்,
வாழ்ந்து முடித்துவிடுகிறேன் !
என்றாலும்,
நம்பிக்கையில்லாத செயல்கள்,
என் பாத்திரத்தில் நிறைவதால்,
எனவே,
இறைவா !!
இருக்கட்டும் கண்டிப்பாய்,
இது என் கடைசி ஜென்மமாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (8-Oct-14, 9:30 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 77

மேலே