எண்ணப் பருந்து
இமை இறுக மூடி மயில் அவள் துயில் கொள்ளும் அழகை...
முகில் கொண்டு முகம் மறைத்து நிலவும்...
புற்களின் நுனி வரை ஏறிவிட்டப் பனியின் துளியும்..
அவளைப் பார்பதற்காய் ஏங்கிப் பகலில் பார்வைக்கு புலப்படாமலே போனதைப்போல....
அவள் எண்ணம் கவரும் திண்ணம் இன்றியும்..
அவளையே சுற்றிப் பறக்கிறது எனது எண்ணப் பருந்து.