வாழ்வோம்வா
என்னை மறந்து உன்
மனதில் நுழைந்தேன்
வெற்றியும் பெற்றேன் !
உன்னை மறந்து என்
மனதை நொறுக்கிட
ஏன் நினைத்தாய்?
ஒரு சொல் போதும்
"சம்மதம்" என
என் காதலுக்கு!
ஒரு சொல் போதும்
"மறுக்கிறேன்" என
என்னுயிர் பிரிவதற்கு!
என் கல்லறை மீது
எழும் எந்நாளும்
சஞ்சலப் புகை !
எனை வெறுத்து நீ
மூட்டிய தீயின்
எச்சங்கள் அவை!
எழுந்திடுவேன் உயிர் கொண்டு
உன் கண்ணீர்த் துளி
என் மேல் பட்டால்!
சாவதற்கா நம் காதல்..?
வாழ்வதற்கே! இல்லையேல்
வாழ்வெதற்கு! வா!
ஒன்றாய் வாழ்வோம்..
நன்றாய் வாழ்வோம்..
நம்பு! வராது வம்பு!