வாழ்வோம்வா

என்னை மறந்து உன்
மனதில் நுழைந்தேன்
வெற்றியும் பெற்றேன் !

உன்னை மறந்து என்
மனதை நொறுக்கிட
ஏன் நினைத்தாய்?

ஒரு சொல் போதும்
"சம்மதம்" என
என் காதலுக்கு!

ஒரு சொல் போதும்
"மறுக்கிறேன்" என
என்னுயிர் பிரிவதற்கு!

என் கல்லறை மீது
எழும் எந்நாளும்
சஞ்சலப் புகை !

எனை வெறுத்து நீ
மூட்டிய தீயின்
எச்சங்கள் அவை!

எழுந்திடுவேன் உயிர் கொண்டு
உன் கண்ணீர்த் துளி
என் மேல் பட்டால்!

சாவதற்கா நம் காதல்..?
வாழ்வதற்கே! இல்லையேல்
வாழ்வெதற்கு! வா!

ஒன்றாய் வாழ்வோம்..
நன்றாய் வாழ்வோம்..
நம்பு! வராது வம்பு!

எழுதியவர் : karuna (16-Oct-14, 11:14 am)
பார்வை : 201

மேலே