நீ எனக்கு

மூனாங்கிளாசு படிக்கயில
மூக்கொழுகி நின்டவளே
முத்தழகி நீயெனக்கு....
மூத்தர சட்டி நானுனக்கு.....

நாலாங்கிளாசு படிக்கயில
நச்சரிச்சி நின்டவளே
நந்தவனம் நீயெனக்கு....
நாத்தக்குப்ப நானுனக்கு.....

அஞ்சாங்கிளாசு படிக்கயில
அர மனச பறிச்சவளே
அத்த மக நீயெனக்கு.....
அழுக்கு மூட்ட நானுனக்கு....

ஆறாங்கிளாசு படிக்கயில
ஆள சாச்சி போனவளே
புண்ணியவதி நீயெனக்கு....
புளுகு மூட்ட நானுனக்கு....

ஏழாங்கிளாசு படிக்கயில
ஏறெடுத்து பார்த்தவளே
முழியழகி நீயெனக்கு....
முட்டக்கண்ணே நானுனக்கு.....

எட்டாங்கிளாசு படிக்கயில
எட போட்டு சிரிச்சவளே
சோள பொம்ம நீயெனக்கு....
சோத்துமூட்ட நானுனக்கு....

ஒன்பதாங்கிளாசு படிக்கயில
ஒளிஞ்சி நின்டு ரசிச்சவளே
ஒல்லிராணி நீயெனக்கு....
ஒதவாக்கர நானுனக்கு.....

பத்தாங்கிளாசு படிக்கயில
குத்தவச்சி போனவளே...
சதிகாரி நீயெனக்கு.....
குடிகாரன் நானுனக்கு....

எழுதியவர் : ம.கலையரசி (16-Oct-14, 12:53 pm)
பார்வை : 124

மேலே