நீ யாரடி
பெண்ணே நீ யாரடி
அந்த இரவின் நிலவா ?
உன் கண்களை கண்டால்
தீயும் பனிக்கட்டி ஆகுமே !
பெண்ணே நீ யாரடி
அந்த பூந்தோட்ட மலரா ?
உன் இதழ்கள் கண்டால்
பட்டாம் பூச்சியும் கிறங்குமே !
பெண்ணே நீ யாரடி
வலுக்கும் வலம்புரி சங்கா ?
உன் கழுத்தை கண்டால்
சீரும் பாம்பும் ஏங்குமே!
பெண்ணே நீ யாரடி
அலை பாயும் கடலா ?
உன் கூந்தல் கண்டால்
அலையும் கரைத்தொட மறக்குமே !
பெண்ணே நீ யாரடி
பாய்ந்தோடும் நதியா ?
உன் கண்ணீர் கண்டால்
மீனும் நீந்த விரும்புமே !
பெண்ணே நீ யாரடி
பறந்தோடும் அன்னமா ?
உன் கால் நடை கண்டால்
துள்ளும் மானும் மயங்குமே !
பெண்ணே நீ யாரடி
வானத்துப் பறவையா ?
உன் இடுப்பின் அசைவு கண்டால்
ஆடும் மயிலும் தோற்குமே !