என் தனிமை தொடரும்வரை

வர்ணனை எல்லாமே
உன் அழகின் பிம்பங்கள்
நிழலாய் தொடர்வதால்
உனக்கு திமிரின் ஜம்பங்கள்

நீ ரசித்திட மட்டும்தான்
என் கவிதைகள் காத்திருக்கும்
உன் ரசனை முடிகையில்
தானாய் உயிர் துறக்கும்

என் தனிமை தொடரும்வரை
தொடரும் கவி பயணம்
உன் கண்கள் காணமல்
என் கவிதை தினம் வாடும்

உன் மௌனம் ஒன்றுதான்
புரியாத ஒரு கவிதை
அதை நான் வாசிக்க
என்னிடம் மொழி இல்லை

எழுதியவர் : ருத்ரன் (16-Oct-14, 1:46 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 85

மேலே