+சொல்லிவிடேன் நீயாவது+
நீ
அருகில் இல்லாத பொழுது
என்னில்
இருக்கும் வீரம்
உன்னை
அருகில் கண்டு விட்டால்
விடுப்பு
எடுத்து சென்றுவிடும்...
பேச
விருப்பம் இருந்தாலும்
முகம் மட்டும் ஏனோ
திருப்பம் கண்டுவிடும்...
எவ்வளவு
சொல்லிக்கொடுத்தும்
வார்த்தைகள் என்னில்
எழ மறுத்துவிடும்
இப்படியே போனால்
நம் காதல்
என்னாவது...??!
அடியே பெண்ணே!
பேசி
விருப்பம் செல்லிவிடேன்
நீயாவது...