+தீண்டிய நினைவுகள்+

தீண்டவா
தீண்டவா என‌
தூக்கம்
எனை அழைத்தது...

தாண்டிவா
தாண்டிவா என‌
கனவும்
குரல் கொடுத்தது...

தீண்டிய
நினைவுகள்
கண்ணீரைக்
கண்ணுக்களித்தது...

எனைவிட்டு
தாண்டிய‌
உந்தன் காதல்
அனைத்தையும்
தகர்த்தெரிந்தது...

நீயுமின்றி
எதுவுமின்றி
நானுமின்றி
நான்..
தனியாய்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Oct-14, 8:21 pm)
பார்வை : 570

மேலே