+காதலி தான் எதற்கு+
காதலி தான் எதற்கு?
அள்ள அள்ள
எல்லை எதுவுமின்றி
காதல் கவிதை மட்டும்
கோடி கோடியாய் வருகின்றது
வருகின்ற
ஒவ்வொரு கவிதையும்
அடுத்த கவிதைக்கான
ஆக்சிஜனைத் தருகின்றது
இதை
எழுதும் போது மட்டும்
சோர்வு வருவதில்லை
சோர்ந்திருக்கும்
நெஞ்சம் கூட
சுகமடைகிறது
காதலர்களே!
காத்திருக்கும் காதலியை
விட்டுத் தள்ளுங்கள்
அவளை
நாளை பார்த்துக் கொள்ளலாம்
இப்பொழுது
இரண்டொரு காதல் கவிதை
எழுதித் தள்ளுங்கள்
காதலை வாழவைக்க
கவிதைகள் இருக்கும் போது
கவலைகள் எதற்கு?
இல்லை நான் கேட்கிறேன்
காதலி தான் எதற்கு?