+நினைக்க நினைக்க நீயே+
கருவாச்சி
உன் நினைவுகளே
கவிஞனாய்
எனை உருவாக்கியது...
உருவாகும்
ஒவ்வொரு கவிதைக்கும்
உந்தன் நினைவே
கருவாகியது...
திருவாக்கு
கேட்கச் சென்றால்
சாமியாகவும் நீ
சாமியாராகவும் நீ...
தனியறையில்
கவிதையோடு
மட்டும் நான்...