அம்மா
தாய் என்னும் உறவு
தனிமையை போக்கும் கயிறு !
சொன்னதையும் சொல்லாததையும்
தெரிந்து கொள்ளும் பிறவி !
கண்டதை விரும்பும் நம்
மழலை மனதில் காணாததை தரும்
கானகமும் இவள் தான் !
பிடித்து பிடித்து நடக்க வைக்கும்
நடை வண்டியும் இவள்தான் !
மடியில் தவழும் குழந்தையை
மனதில் தவழ வைக்கும் தொட்டிலும் இவள் தான் !
நிலாவை காட்டி சோறு ஊட்டும்
நிலாவும் இவள் தான் !
கண்களில் தாங்கும்
கடவுளும் இவள்தான் !
தப்பை அன்பால் திருத்தும்
நீதி மன்றமும் இவள் மனம் தான் !
இதயத்தில் வாழும்
தெய்வமும் இவள் தான் !
பரிவு காட்டி
பாலுட்டும்
பத்தினியும் இவள் தான் !!!1