உன் சம்மதம் வரும்வரை
விலகிட ஒரு நொடி
விரும்பிட ஒரு நொடி
உன் சம்மதம் வரும்வரை
நான் காணும் நரகம்தனை
சொல்லி ,மாளாது
சொல்லால் தீராது
சோகம், எல்லாமே
புலம்பல் ஆகாது
உன் மௌனம் ஒரு கணம்
விடுமுறை வருமென்றால்
என் காதல் அது
தானாய் வெளி வரும்
உன் சம்மதம் வரும்வரை
தொடரும் என் முயற்சிகள்
உன் நிழலாய் வாழ்ந்திடும்
என் கனவுகள் கருவறை