ஏன் இந்த ஓட்டம்

ஏன் இந்த ஓட்டம்
எதன் மீது நாட்டம்
எதுவரை இவர்கள் ஓடுகிறார்கள்
திரும்பவோ
ஓய்வெடுக்கவோ விரும்பாது
இயற்கைக்குள் இயன்றவரை
அழித்து தான் மட்டும்
நன்றாக செழித்து ஏதையோ
அடைவதற்காக ஓடுகிறார்களே
யார் இவர்கள்

வீழ்ந்து கிடப்பவனை
தூக்காமல்
வீதி கடமைகளை மதிக்காமல்
விதவித வண்ண உடைகளில்
தினமும் திரிகிறார்களே எதற்காக

பசிக்கு உணவு
அண்ட வீடு
ஆசைக்கு சொந்தம்
அழகான குடும்பம் இவை
அனைத்தும் இருந்தும்
இல்லை இல்லை என
திரிகிறார்களே எதை தேடி

சிரிக்க மறந்த உதடுகளுடன்
சிந்தனைகளை முகமாக்கி
சீறிப்பாயும் இவர்களின்
நோக்கம் என்ன

ஓ பணமா அந்த
1 முதல்1000 வரை
எழுதி இருக்கும் காகிதமா
அதற்குதானா இந்த ஓட்டம்

மனதைவிட பெரிதாய்
மனிதத்தைவிட பெரிதாய்
இரை மறந்து
இறை மறந்து
இயற்கையை ஒழித்து
மூச்சு வாங்க ஓடி ஓடி களைத்து
முடி நரைத்தபின் எண்ணி
பார்க்க சேகரிக்கும் அந்த காதகிதமா

ஆகா மனிதா
பெயர் காரணம் மறந்து போனாயே
துயர் காரணியை தேடி போனாயே
ஓடி முடித்து ஆடி முடித்து
அடங்குகையில் எதை கொண்டு போவாய் கீதை கேட்கிறது
மறந்தாயா

எப்படியோ போ ஆனால்
மனிதன் எனும் பெயர் கொண்டு
திரியாதே
பணம் தேடும் இயந்திரம்
என பெயர் சூடிக்கொண்டு போ

எழுதியவர் : கவியரசன் (26-Oct-14, 7:27 pm)
Tanglish : aen intha oottam
பார்வை : 71

மேலே