சின்னத் தாத்தா கோபம்

சின்னத்தாத்தா ஏன் ரொம்ப கோவமா இருக்கீங்க?

அட போடா எனக்கு வந்த இந்த அழைப்பிதழைப் பாருடா. எம் பேரு கருணாகரன். எனக்கு வயசு எண்பது. இன்னும் கல்யாணம் ஆகாதவன். இந்த அழைப்பிதழைப் பாருடா . முகவரிலே "திரு. கருணாகரன்"ன்னு எழுதிருக்காங்க. இது என்னடா அநியாயம்?
என்ன தாத்தா நீங்க சொல்றது ஒண்ணும் புரியல

ஏண்டா கல்யாணம் ஆகாத பெண்கள் எவ்வளவு வயசானவங்களா இருந்தாலும் அவுங்க பேருக்கு முன்னாடி 'செல்வி'ன்னு போடறாங்க. ஆம்பளைங்க என்னடா இளிச்சவாயங்களா? அவுங்க பேருக்கு முன்ன்னடி 'செல்வன்'ன்னு போட்டா என்னடா கொறஞ்சு போயிடும்? ''திரு' ன்னு போட்டு என்ன மாதிரி பிரமச்சாரிங்கள கேவலப்படுத்தறாங்க?

எழுதியவர் : மலர் (27-Oct-14, 6:24 pm)
பார்வை : 338

மேலே