இனி ஒரு காதல் எதற்கு

இனி ஒரு காதல் எதற்கு
மனம் ரணமாவதர்க்கு
காதல் போர்களமா
உன் பதில் வந்திடுமா

சிறகுகள் இல்லை இழக்க
பிறவிகள் இல்லை எடுக்க
உன் மௌனத்தை நீயே தொலைக்க
ஒரு வழி சொல்லம்மா

உந்தென் மௌனம் தொடர்ந்தால்
என் கவிதைக்கு பேச்சு வரும்
என் காதலின் ஆழம் சொல்லும்
உன் நிழலும் அழும்
தானாய் உன்னை விலகும்

எழுதியவர் : ருத்ரன் (27-Oct-14, 7:09 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 69

மேலே