+நினைத்தேன் நான் உனைத்தான்+
இனிப்பாய்
அணைப்பாய் என
நினைத்தேன் நான்
உனைத்தான்
இதயம்
நிறைப்பாய் என
அழைத்தேன் நான்
உனைத்தான்
களிப்பை
அளிப்பாய் என
விளித்தேன் நான்
உனைத்தான்
களைப்பை
துடைப்பாய் என
எதிர்பார்த்தேன் நான்
உனைத்தான்
இனிப்பாய் அணைத்து
இதயம் நிறைத்து
களிப்பை அளித்து
களைப்பை துடைக்க
உடனே வீசிவிடு தென்றல் காற்றே...!!!