--இடம் தேடி செல்கிறேன்--

--இடம் தேடி செல்கிறேன்--

கற்பழிக்க வந்தவனின்
கழுத்தை நெரித்தேன்
அதனால்
என் கழுத்தை சட்டங்கள் நெரித்தது..

கற்பழிக்க பட வேண்டியவள்
என நெரித்ததா..
கற்பழிக்க படவில்லையே
என நெரித்ததா..

அவனின் அடங்கா வெறிக்கு
என் உடம்பு அடங்கிருந்தால்..
தெருவோர சாக்கடையில்
புழுக்களுக்கு புது உணவு ஆகியிருந்தால்..
நாள்கடந்து அவனின் மணம்
என் உடம்பிலிருந்து வெளிவந்திருந்தால்...
அய்யோ பாவம் என
அவர்கள் அள்ளி எடுத்திருந்தால்...

சட்டங்களின் மனம் மகிழ்ந்திருக்குமோ..

பாய்ந்து வந்த நரியை
எதிர்த்து நின்ற மானின்
கொம்பு கொன்றால்
தவறு யார் மீது ?

தீங்கு வரும் பழத்தை படைத்தவன்
குற்றவாளி இல்லை..
பாசாங்கு செய்தவன்
குற்றவாளி இல்லை..
பாசாங்கறியா தின்றவனுக்கு மட்டும் சாபம்.

என்று சொன்ன உலகம் தானே...

இருட்டறையிலிருந்து வந்தேன்...
இருட்டறையிலிருந்து செல்கிறேன்..

பெண்ணின்
உடலுக்கும் உணர்வுக்கும் உரிமைக்கும்
மதிப்பளிக்கும் இடம் தேடி..!

எழுதியவர் : ச.ஷர்மா (31-Oct-14, 11:10 am)
பார்வை : 106

மேலே