சுதந்திரப்பொன்விழா

திடமனங் கொண்ட தோழா
தேசமேஅடிமைவாழ்வின்
கொடுமையினாலேஇன்னல்
கொண்டதனாலேபொங்கும்
படையிலேசிப்பாயாகி
பலர்வரவைத்தபோசு
நடத்தியபோரேகாந்தி
நயந்துதானேற்றவீர
சுதந்திரம் நாடேகாண
சுவாசமேகொடுத்ததையா

இது தசசதுரபந்தம்
குறுக்காக பார்க்க சுதந்திரப்பொன்விழா என்று வரும்
இது அப்போது எழுதப்பட்டது
ஒரு புதிய முயற்சி
பத்துக்கு பத்து நூறு கட்டாங்களில் பாடலை எழுதி
ஈற்றடி முதல் எழுத்து, ஈற்றயலடி 2ஆம் எழுத்து என குறுக்கு மூலை விட்டமாகப் பார்க்கவும்

எழுதியவர் : சு.ஐயப்பன் (1-Nov-14, 8:24 pm)
பார்வை : 119

மேலே