பொய்மையே வாழும் இடம்
பொய்கள் பூத்துக் குலுங்கின
வாயினில்
கோர்டின் பொய்சாட்சி என்றான்
பொய்கள் பூத்துக் குலுங்கின
மேடையில்
அரசியல் வாதி என்றான்
சத்திய வீதி நடந்தவன்
சாலையில் சிலையாக !
பொய் வீதி நடப்பவன்
வாழ்வில் வளமாக !
தரும தேவதை கேட்கிறாள் :
அறமே உலகில் நீ நலமா ?
பூமி மௌனமாய் நின்றது !
____கவின் சாரலன்